புதன், 16 ஜனவரி, 2013

உன்னை நான் பார்க்கையில்




உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கே
ஆடைக்கும் மேலாடை நீ கொண்டு வா இங்கே
உன் கூந்தலில் பார்க்கிறேன் தொங்கும் தோட்டங்கள்
பொன் மாலையில் மல்லிகை பூவைச் சூட்டுங்கள்
என் மார்பிலே ஆடும் பொன் ஆரமே
செந்தூரமே உன்கள் கண்ணோரமே
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே
மை வைத்த கண்ணோரம் பொய் வைக்கக் கூடாது
மாதங்கமோ தங்கம் கை வைக்கக் கூடாது
நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூ பூக்கும்
நீ பேசிடும் சொல்லிலே கள்ளும் தேனூறும்
பிருந்தாவனம் எங்கே போகின்றது
என் கன்னமே தேடி போகின்றது
நீ கண்ணனா என் உயிர் கள்வனா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

லா லா லா லா லா லா லலலல லா லா

நான் பேச வந்தேன்





நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணி வாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
பட பட படவென வரும் தாபங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சல சல சல வென வரும் கீதங்கள்

குலமகள் நானம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஆ ஆ ஆ...
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கல கல கல என வரும் எண்ணங்கள்

ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பள பள பள என வரும் கிண்ணங்கள்

செல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
விடுகதை ஓர் நாள் தொடர் கதை ஆனால்
அது தான் ஆனந்த எல்லை ஆ ஆ ஆ..
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

முத்தம் போதாதே சத்தம் போடாதே






முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ





ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

காலை தென்றல் பாடி வரும்





ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

உறங்கும் மானிடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை
நெஞ்சில் ஒரே பூ மழை.

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

உறவுகள் தொடர் கதை






உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

வாழ்வென்பதோ கீதம்
வளர்க்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துண்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர் கதை
உணர்வுகள் சிறு கதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா






பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஓம் மாங்கல்யம் தந்துனா நென

மமஜீவன ஹெதுனா

கந்தெ பத்ரானி ஷுபகே

த்வம் தீய ஷரதம் ஷுபம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்

எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே

பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே

ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி

நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே

கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே

மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு







ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


*****************************************

ல ல ல ல ல ல
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

காத்தாடி போலாடுது