பூமுடித்து பொட்டு வைத்த வட்ட
நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
ஓம் மாங்கல்யம் தந்துனா நென
மமஜீவன ஹெதுனா
கந்தெ பத்ரானி ஷுபகே
த்வம் தீய ஷரதம் ஷுபம்
மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்
கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்
எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்
இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்
மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே
பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே
ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி
நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி
நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்
அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்
பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே
கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே
மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா
பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக