புதன், 16 ஜனவரி, 2013

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ





ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

1 கருத்து: